நான் சொல்றதை கேளுங்க


நம்ப பேச்சை நம்ப காலே கேட்காத போது வேறு யாரு கேட்கப்போறாங்க

என்னாச்சு சுண்டெலிக்கு வடிவேல்,செந்தில்,சிங்கமுத்து போன்றோரின் எழச்சி மிக்க தேர்தல் பிரசாரத்தைக்கேட்டதால் இந்த மாதிரி எல்லாம் தானே வருதா ன்னு சந்தேகப்படாதீங்க
இதை செய்து பாருங்க நீங்களும் என்னை மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவிங்க

இப்ப நாற்காலியில் தானே உட்கார்ந்து இருக்கீங்க தரையிலே உட்கார்ந்து மடி கணணியை என்னை மாதிரி சோபாவில் சாய்ந்துக்கொண்டு காலை நீட்டிக்கொண்டு பார்ப்பவர்களோ அல்லது படுக்கையில் சாய்ந்துக்கொண்டு கை கணணி யை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் பின்பு இதை செய்து பார்த்துக்கொண்டு உங்களை நீங்களே நொந்து கொள்ளலாம்.

முதலில் நாற்க்காலியில் அல்லது சோபாவில் உட்கார்ந்தபடியே
வலது காலை ஒரு அடி தூக்குங்கள் இடது கால் தரையிலேயே இருக்கட்டும்
பின்பு வலது பாதத்தை கடிகார சுற்றில் சுற்றவும்..ஒரு ஐந்து அல்லது ஆறு சுற்று சுற்றவும்
அதே சமயம் உங்கள் வலது கையால் ஆறு நம்பரை 6 என்று காற்றில் எழதவும்
இப்ப பாருங்க உங்க கால் உங்க பேச்சை இப்ப கேட்காது.எதிர்ப்பக்கமாக சுற்றும்.
ஒரு முக்கிய நிபந்தனை
யாரும் வீட்டில் இல்லாத போது இதை செய்து பார்க்கவும் .
இல்லாவிட்டால் ஒரு நல்ல குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய பாபம் எனக்கு வந்துவிடப்போகிறது.

=========================================================================
எல்லோரும் என்னை உபயோகமாகவே எழுதலை என்று கூறியதால் கல்லூரியில் படிக்கும் நம் எதிர்கால சந்ததிகளுக்காக
இந்த பதிவு

கல்லூரி பாடத்தில் எப்படி அசைன்மென்ட் எழுதுவது (மறுநாள் தான்  சமர்ப்பித்தல் கடைசி நாள் என்ற சூழ்நிலை) என்பதை இப்பொழது விளக்குகின்றேன்
இரவு 8 மணிக்கு மேல்
1.முதலில் நேராக நல்ல வசதியான நாற்காலியில் உட்காரவும்
2.பின்பு MSN ,ICQ gmail முதலிய இணைப்புக்கு சென்று உங்கள் email ஐ பார்க்கவும்
3. உங்கள் assignment ஐ மிகவும் கவனமாக படித்து புரிந்து கொள்ளவும்
4.கொஞ்சம் காலாற நடந்து அருகில் இருக்கும் கடையில் சாக்லெட் வாங்கி சாப்பிடவும்(டார்க் சாக்லெட் ஞாபக சக்தியை வளர்க்குமாம்)
5.மீண்டும் இமெயிலை பார்க்கவும்
6.கைப்பேசியில் உங்கள் நண்பரைக்கூப்பிட்டு காப்பி சாப்பிட போகாலாமா என்று கேட்கவும்
6.மறுபடியும் அறைக்கு வந்தவுடன் நேராக நாற்காலியில் உட்காரவும் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும்
7.மீண்டும் உங்கள் assignment ஐ மிகவும் கவனமாக படித்து புரிந்து கொள்ளவும்
8.நீங்கள் 4 ம் வகுப்பில் படித்த நண்பருக்கு இன்னும் இமெயில் அனுப்பவில்லை என்று ஞாபகத்துக்கு வந்தால் உடனே எழுதவும்
9.பாத்ரூமுக்கு போய் கண்ணாடியில் உங்கள் பற்களை உற்று பார்தது ஏதாவது சொத்தை பல் இருக்கின்றதா என்று ஆராயவும்.
9 ரூமுக்கு வந்தவுடன் MP3 பாட்டுக்களை internet ல் தேர்ந்து எடுக்கவும்
10.அதை பதிவிரக்கம் செய்யவும்
11.மறுபடியும் இமெயிலை பார்க்கவும்.
12 உங்கள் கம்யூட்டரில் MSN chat மூலம் உங்கள் நண்பர்களிடம் உங்கள் எதிர்காலத்தைப்பற்றி திட்டமிடவும்(வேறு என்ன கோடை விடுமுறை பயணத்திட்டம் தான்)
13.புதிதாக download செய்த mp3 பாட்டுக்களைக் கேட்கவும்.
14.உங்கள் பெண் நண்பி ஒருவருக்கு போன் பண்ணி அவர் எழுதிவிட்டாரா என்று கேட்கவும்.அந்த பாட பேராசிரியர் ,பாடத்திட்டம்,கல்லூரி,மற்றும் உலக அளவில் மாணவருக்கு எதிராக நடக்கும் பாடசுமை  இவைகளைப்பற்றி உங்கள் மனக்குறைகளை கொட்டித்தீர்க்கவும்
15.பின்பு தெரு முனை பெட்டிக்கடையில் சூயிம்கம் மற்றும் அன்றைய தினசரியையும் வாங்கவும்.
16.தினசரியில் முக்கியமான நிகழ்ச்சிகளை படிக்கவும்(அதான் TV நிகழ்ச்சி நிரல் தாங்க)
17.bored.com வெப்சைட்க்கு போய் உங்களுக்கு பிடித்த விளையாட்டை தேர்வு செய்யவும்
18.கைகளை கழுவவும்
19.போன ஆண்டு கல்லூரி மலரை எடுத்து நண்பர்கள் புகைப்படங்களைப்பார்க்கவும்.தெரியாத நண்பர்களை உங்கள் நினைவுக்கு கொண்டு வரவும்
20.இப்போது கம்யூட்டரை reboot பண்ண வேண்டி இருக்கும்.
21.Assignment ஐ மறுபடியும் படிக்கவும்
22.நாற்காலியை ஜன்னல் ஒரம் நகர்த்திக்கொண்டு சூரியோதத்தை ரசிக்கவும்
23 தரையில் படுத்துக்கொண்டு உரக்க கொட்டாவி விடவும்
24.மன அழுத்தத்தை தீர்க்க எந்த பொருளையாவது உடைக்கவும்
25. மறுபடியும் இமெயிலை பார்க்கவும்
24. மணி இப்பொழது காலை 6 மணி. மீதம் இருக்கும் 30 நிமிடத்தில் assignment ஐ அவசர அவசரமாக எழுதவும்
25.எல்லோரிடமும் இரவு முழுவதும் தூங்காமல் எப்படி கடினமாக உழைத்தீர்கள் என சொல்லி புலம்பவும்..



அவள் ஒரு தொடர்க்கதை


நடிகை சுஜாதாவுக்கு ஓர் அஞ்சலி.
எழுபதுகளின் ஒரு அழகிய கண்டுபிடிப்பு நம் சுஜாதா.
அதுவும் பாலசந்தர் அறிமுகம் வேறு. என்னை பொறுத்தவரை சுஜாதா,நதியா இவர்களுக்கெல்லாம் in built சோகம் கலந்த முகம் அமைந்துள்ளது என நினைப்பதுண்டு. அது அவர்கள் நடிப்பை பல
 மடங்கு தூக்கி காட்டும்.
முதல் படமான அ.ஒ.தொ.கதையிலேயே நம் மனதை தொட்ட நடிப்பு.அப்போது பிறந்த பல குழந்தைகள் சுஜாதா என்றே பெயர்
சூட்டப்பட்டன.பிறகு பல படங்கள். அன்னக்கிளியில் சோகத்திலும் ஒரு சுகம் இருக்கு வாத்தியார் அய்யா என்று சிவகுமாரிடம் சொல்லி விட்டு தன ஆசையை அடக்கிகொள்ளும் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்து விடுவார்.பிறகு விதி திரைப்படத்தில் வக்கீலாக  அசத்தினார்.பல நாட்கள் தொடர்ந்து ஒலி/ஒளி பரப்பான அந்த வசனங்கள் அப்போது பலருக்கு மனப்பாடம்.
தமிழ் திரை உலகம்  சுஜாதாவை என்றும் மறக்காது.
புதுவை ராம்ஜி


ஆமாம் விதி படத்தைப்பார்த்து விட்டு  வக்கீலுக்கு படித்த பெண்கள் அநேகம் பேர்கள்
கதாநாயகனுக்கு மகளாக நடித்து பின்பு ஜோடி சேர்ந்து பின்பு அம்மாவாக நடித்து ஒய்வு பெரும் தமிழ் கதாநாயகிகளில் சுஜாதாவும் விதி விலக்கில்லை. ஆனால் அவர் எப்போதும் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் நடித்து விட்டு மறைந்தார்.
 சுஜாதா நடித்து எனக்கு பிடித்த பாடல் இது.




 அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...ஆராரி...ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

இந்திய அணிக்கு பாராட்டுக்கள்

  India's Sachin Tendulkar, centre top, is carried by his teammates after beating Sri Lanka in the Cricket World Cup.

அன்று நினைத்தோம் அதற்க்கு உழைத்தோம் 
இன்று முடித்தோம் இடத்தைப்பிடித்தோம்

------------------------------------------------------------------------------------------------------------


உள்ளப்போராட்டம்

ஒரு தாத்தா தன் பேரனுடன் உலாவப்போகும் போது உரையாடிக்கொண்டு சென்றார்.
என்னுள் ஒரு பெரிய போர் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்றார்
இரண்டு ஓநாய்கள் என்னுள் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஒரு ஒநாய் அசிங்கமானது கொடூர குணமுடையது .அது கோபம், பொறாமை,போர்க்குணம்,,பிடிவாதம்,தற்ப்பெருமை,தன்னலம்,,பொய் முதலிய குணம் நிரம்பியது.
இரண்டாவது ஒநாய் அழகானது,,நல்ல குணமுடையது,அது நட்ப்பானது
அன்பு,,நியாயம்,அமைதி,உண்மை நேர்மை,நீதி,இரக்கம் மற்றும் ,தாராள குணமுடையது.
இந்த இரண்டுக்கும் உள்ள போரட்டம் உன் உள்ளத்திலும் மற்றும் எல்லோரிடத்திலும் இருக்கும்.என்றார்  
 பேரன் அவரை உற்றுப்பார்த்துவிட்டு அவருடைய பேச்சை உள்வாங்கிக்கொண்டான்
பின்பு தாத்தாவிடம்  தாத்தா எந்த ஒநாய் ஜெயிக்கும் என்று கேட்டான்
நீ எதற்கு தீனி போடுகிறாயோ அதுதான் என்று தாத்தா பதில் சொன்னார்.
 .