தந்தையர் தினம்


தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி..
எல்லோரும் தாய்த்திருநாடு என்னும் போது அவர் மட்டும் ஏன் தந்தை என்று சொன்னார்.?
ஆம் தாய் என்று சொன்னால் அன்பு வந்துவிடும் ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் நமக்கு வீரம் வேண்டியிருந்தது ஒரு சக்தி தேவைப்பட்டது அது யாரால் நமக்கு கொடுக்கமுடியும் ஒரு தந்தையால் அல்லவா அது முடியும்.
எனக்கு என்னமோ தாயை மிக உயர்த்தி பேசும் இந்த சமூகம் அதற்கு சமமாக தந்தையை பார்ப்பததாக தெரியவில்லை.
என்னைப்பொறுத்த வரையில் தாயை  விடவும் தந்தை நமக்காக தியாகங்கள் நிறைய செய்கின்றார் என தோன்றுகின்றது

“தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம்”

என்று கவிஞர் வாலி பாடியது போல் தகப்பனின் சுமை ஆயுசு வரையில்.
"குழந்தை பாரம் உனக்கல்லவா குடும்பபாரம் எமக்கல்லவா"

என்று ஒரு கணவன் பாடுவது போல் இன்னொரு திரைப்பட பாடல்.
இது தந்தையர்களுக்கு மிகப்பொருந்தும்.
என் தந்தையும் இதற்கு தகுந்த உதாரணமாக திகழ்ந்தார்.
எனது தாய் அவ்வளவாக படிக்காத குடும்ப தலைவி.எனது தந்தை ஒரு பொறியாளர்.ஆனால் மனைவியை தகுந்த மரியாதையுடன் நடத்தினார்.வீட்டு நிர்வாகம் அத்தனையிலும் அம்மாவின் ஆலோசனைபடி நடந்தார்.ஏன் இதை கூறுகிறேன் என்றால் இந்த காலத்தில் மனைவி எவ்வளவு படித்திருந்தாலும் சம்பாதித்தாலும் சில கணவர்கள் அவர்களை அலட்சியம் பண்ணும் போது அந்த நாளில் என் தந்தை மனைவிக்கு உரிய உரிமையை கொடுத்தார் ஆனாலும் குடும்ப தலைவன் என்ற கம்பீரம் அவரிடம் எப்பொழுதும் இருக்கும்..

என் தகப்பனார் அரசு வேலையில் இருந்து  பொறியாளராக ஓய்வு பெற்று விட்டு பின்பு தனது 78 வயது வரையில் ஒரு தனியார் துறையில் வேலைப்பார்த்தார்.எங்களிடமிருந்து பணம் என்று எதிர்ப்பார்த்தது இல்லை.மிக மிக எளிமையாக வாழ்க்கை நடத்தினார்.நாங்கள் வெளிநாட்டில் இருந்தபோதும் வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருந்தார்
அவர் மோதிரமோ அல்லது வேறு தங்க நகையோ அணிந்து நாங்கள் பார்த்தது இல்லை தனது.குழந்தைகள் நலமே போதும் என்ற எண்ணத்துடன் கடைசி நாள் வரை வாழ்ந்தார். அவருக்காக் வைத்திய செலவுக்காக எந்த வித பெரிய செலவும் எங்களுக்கு அவர் வைக்கவில்லை.
அவர் வார்த்தைக்கு மாறாக நான் செய்த செய்கைக்கு நானே பலனை அனுபவித்த பின்பு தான் அவருடைய அறிவுரையின் உண்மை காலம் சென்று என்னால் உணரப்பட்டது
அவரின் நினைவு நாள் இரண்டு நாட்கட்கு முன் வந்தது.
.


அப்பா உன்னால் வந்தேன் உலகில்.
என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய்
நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில
என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்

ஓய்வில்லா உழைப்பு மட்டும் உன்னிடம் அதில் அடைந்த
பலன்கள் அனைத்தும் எங்களிடம்.
தன்னலமில்லா உள்ளத்தின் பெயர் தந்தை என
நான் அறிந்துகொண்ட போது நீ இல்லை இவ்வுலகில்

உன் கண்டிப்பு இல்லையெனில் நங்கூரம் இல்லா
மரக்கலமாய் பாறையில் தூளாயிருப்போம்.
உன்னால் தானய்யா எமக்கு அங்கீகாரம் எல்லா
நலங்களும் தந்தவனே எங்கிருக்கின்றாய் இன்று.

அடுத்த பிறவி ஒன்று இருந்தால் இறைவா
என்னை அவருக்கு மகனாக பிறக்க வைக்காதே
எத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது.
அவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு




இன்று உலக தந்தையர் தினம்
எல்லா தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

கண்ணன் தாசன்


கண்ணதாசன் கவித்திறன் பற்றி எழுதியவர் அநேகம். நானும் அவர் புகழைப் பாட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலின் விளைவே இந்த தொகுப்பு. அவரின் பாடல் வரிகளை பக்தி , காதல், தத்துவம் , வீரம் , பாசம் என்று பல வகைகளையும் நாம் சுவைத்து உள்ளோம். பக்தி என்ற தலைப்பை பார்த்தால் பல கடவுள்கள் மீது பாடி உள்ளார். என்றாலும் கண்ணதாசன் அல்லவா ? முதலில் அவர்  கிருஷ்ணன் மீது கொண்ட பக்தியை சுவைப்போம்

ண்ணதாசனும் கிருஷ்ணனும்
கண்ணனின் நிறம் என்ன ?  கவிஞர் இப்படி வர்ணிக்கிறார் :
                              கண்ணனின் மேனி கடல் நீலம். அவன்
                              கண்களிரண்டும் வான் நீலம்.
                              கடலும் வானும் அவனே என்பதை
                              காட்டும் குருவாயூர் கோலம்.     (கிருஷ்ண கானம்)
  மேலும்,      
                               பச்சை நிறம் அவன் திருமேனி
                               பவழ நிறம் அவன் செவ்விதழ்கள்
                               மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்
                              வெண்மை நிறம் அவன் திரு உள்ளம் (திருமால் பெருமை)
அவன்  கருப்பு சரி.  ஆனால் ஒரு பெண் கருப்பு என்று ஒதுக்கி வைக்கப்படும் போது அவள் கண்ணனிடம் எப்படி அழுகிறாள் தெரியுமா?
                              மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
                             நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
                             என்றவர் ,
                            நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (நா.ஒ.பெண்)
                            என்று உரிமையோடு கண்ணனை திட்ட அவரால் மட்டுமே முடியும்.
நாயகி பாவத்தில் அவர் கண்ணனிடம்  ராதை  ஊடல் செய்வது போல் ,
                            கோபியர் தம்மை தொட்ட கைகள் எந்தன்
                           கூந்தலை தொட வேண்டாம்.
                           நான் கோடியில் ஒன்று  அல்ல.
                           கொஞ்சிட வர வேண்டாம். என்
                          கோலமும் கெட வேண்டாம்.           (கி.கானம்)
  ஆனால் திருடன் சும்மா விடுவானா?
                            சோலை யமுனை வெள்ளம்
                            துள்ளி எழுந்து அவள் மேனியை
                           தொடவும் செய்தான் கண்ணன்
                           மீண்டொரு கலகம் செய்தான்.
என்று முடிக்கிறார்.  எவ்வளவு அழகு ?
அதே கிருஷ்ண கானத்தில்
                             மோகனனின் பெயரைச்சொல்லி
                            மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி
                            நெய் இருக்குது ராமா ஹரி .
                            படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம்
                            பொடிபொடியாய் நொறுங்குதடி
                           அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
                           பாதத்திலே போய் விழுந்தால்
                          வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ண ஹரி
என்று அவன் பெருமையை விளக்குகிறார்.
மனம் துன்பத்தில் உழலும் போது அவர் கதா பாத்திரங்கள் வாயிலாக கிருஷ்ணனிடம் கூறியவை நமக்கு என்றும்
ஆறுதல் அளிப்பவை. உதாரணங்கள் :
                             பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள். அந்த
                            பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்.
                            நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்?
                            நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.
                           உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
                           உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம்
                           விலகும் கண்ணா.   (அவன்தான் மனிதன்)
                           தர்மம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்.
                           தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்.
                           கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
                           கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா. (ராமு)
      என்னும் போது நமக்கும் துன்பம் குறைந்து விடுகிறது.
 பாரதியை போல இறைவனை நண்பனாய், சேவகனாய், காதலியாய், ஆசானாய் பார்த்த நம் கண்ணதாசனை
நாமும் தொடர்ந்து ரசிப்போம்.    




==================================================================


பாரத மாதா , அன்னை பூமி , மங்கையராய்ப் பிறப்பதற்கே ,,....
எதற்கு இந்த பீடிகை என்று நினைக்கிறீர்களா?
இதோ டைம்ஸ் ஆப் இந்தியாவில் 16 .06.2011  அன்று வந்த செய்தியினை படியுங்கள் :
 உலகத்தில் உள்ள நாடுகளில்  பெண்கள் வாழ்வதற்க்கு மிக மோசமான நாடுகள் என்ற பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில உள்ளது. இது Thomson Reuters Foundation எடுத்த சர்வே வெளியீடாகும்.
நமக்கும் கீழே மோசமான நாடுகள் எவை தெரியுமா?
ஆப்கான , காங்கோ, பாகிஸ்தான், சோமாலியா ஆகியவை.
மிக அதிகமாக விபச்சாரம், பெண் சிசு கொலை, மேலும் கடந்த நூற்றாண்டில் ஐந்து கோடி பெண்கள் காணாமல் (!) போயிருக்கிறார்கள் என்ற பெருமையினால் (!) நமக்கு நான்காவது இடம் கிட்டியிருக்கிறது.
நம்ப முடியவில்லை. மாதொரு பாகன் ,பாரத மாதா, தமிழ் தாய் போன்று பல வகைகளிலும் பெண் பெருமை போற்றும் நாம் நாடா இப்படி?




பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா -
 அதில் பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
 கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா - எந்தக்
கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா




புதுவை ராம்ஜி



எல்.கே.ஜியின் எழுத்து


கடந்த இரண்டு நாட்களாக நான் எழுதிய பதிவு ஒன்றுக்காக சில அன்பர்கள் என்னை கண்டன பின்னூட்டங்களால் கிழி கிழி என்று கிழித்துக்கொண்டிருந்த வேளையில் என் பதிவில் உள்ள ஆரம்ப வரிகளான கான மயிலாட பாடலின் வரிகளில் உள்ள எழுத்துப்பிழையினை சுட்டிக்காட்டி பிரபல எழுத்தாளர் அமுதவன் எழுதியிருந்தார்.பத்திரிக்கைகளில் மட்டும் நான் அறிந்த ஒரு சிறந்த  எழுத்தாளர் எனக்கு எழுதுவது நான் எதிர்பாராதது.
அவர் போன்ற எழுத்தாளர்கள் முன் நான் வான்கோழி கூட இல்லை .சும்மா கொசு தான்.
அவர் என் பதிவை பார்த்து  எனக்கு எழுதியது.ஹார்வேர்ட் பேராசிரியர் நம் ஊர் 3 வயது எல் கே ஜி பையன் போட்ட ) C என்று திருத்தியதற்க்கு சமம்.
பயமாக இருக்கிறது அவரெல்லாம் என் பதிவை படிக்கிறாரே என்று.
அமுதவன் சார் மிக்க நன்றி பிழையை சரி செய்து விட்டேன்.
==================================================================================
ஜென் துறவி பென்கே தனியாக வாரக்கணக்கில் தியானத்தில் ஈடுப்பட்டிருப்பார்.அப்போது அந்த தியானத்தில் கலந்துக்கொள்ள ஜப்பானில் உள்ள அவரது மாணவர்கள் வருவார்கள்.
அப்பொழுது ஒரு மாணவன் பொருள் திருடியதற்க்காக பிடிப்பட்டான்.மற்ற மாணவர்கள் அவனை பிடித்து வந்து குருவின் முன் நிற்க வைத்து அவனுக்கு தண்டனை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். குரு ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தார்.
மற்றொரு சமயம் அதே மாணவன் அதே போல் மறுபடியும் திருடிக்கொண்டு மாட்டிக்கொண்டான்.அப்பொழுதும் மாணவர்கள் அவனை கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டு குருவிடம் ஒப்படைத்தனர்.அப்பொழுதும் குரு அவனை ஒன்றும் சொல்லவில்லை.
மற்ற மாணவர்களுக்கு  ஒரே கோபம் .ஒரு புகார் கடிதத்தை குருவிடம் கொடுத்தார்கள்..அதில் அந்த திருட்டு மாணவனை உடனடியாக குரு வெளியேற்ற வேண்டும் என்றும் அவன் அவர்களோடு சேர்ந்து படித்தால் அவர்கள் அனைவரும் அந்த குருகுலத்தை விட்டு விலகப்போவதாகவும் என்று எழுதியிருந்தார்கள்.
குரு அமைதியாக அதைப்படித்து விட்டு நல்லது மாணவர்களே.நீங்கள் தாரளமாக வேறு இடத்துக்கு சென்று படித்து முன்னேறுங்கள்..உங்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று தெரிந்திருக்கின்றது.ஆனால் இந்த ஏழை சகோதரனுக்கு எது நல்லது எது கெட்டது என்று தெரியவில்லை.யார் இவனுக்கு சொல்லி தருவார்கள்? அதை சொல்லி தருவது என் கடமை அல்லவா? நீங்கள் அனைவரும் வேறிடம் சென்றாலும் இவனை நான் ஆதரிப்பேன் என்றார்.
அதைக்கேட்ட திருடிய மாணவனின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.திருடவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் இருந்து மறைந்தது