தேர்தல் குடு குடு


இப்போதெல்லாம் ஊரில் குடுகுடுப்பைகாரனை பார்ப்பதே இல்லை. சரி. கற்பனையில் ஒரு
கு.கு.காரன் தேர்தல் டயத்தில் என்ன சொல்கிறான் பார்ப்போமா?

கலைஞர் வீட்டு வாசலில் :
குடு குடு குடு .நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது.
சொந்த பலத்தை நம்பி இருப்பீங்க.உடன்பிறப்பை உசுப்பி எழுப்ப
கடனா வாங்க போறீங்க ? சேர்த்ததை அள்ளி விடுவீங்க
ஊழலெல்லாம் மறந்திடும் பாருங்க.
நாற்காலியில் சின்னவர் உட்காரும் அழகை
பார்த்து ரசிப்பீங்க.
ஜக்கம்மா வாக்கு பலிச்சிடும் பாருங்க. எனக்கு எதாச்சும் போடுங்க.
  (கலைஞருக்கு ஏக குஷி )
அடுத்து போயஸ் வீட்டு வாசலில் :
குடு குடு குடு .நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது.
ஜக்கம்மா வாக்கில் நல்லது சொல்றா. கேட்டுக்கோ தாயி.
மகத்திலே பொறந்த நீ ஜகத்தை மறுபடி ஆள போறே.
ராஜா உள்ள போன ராசியிலே இந்த
ராணிக்கு அடிக்குது யோகம்.
கருப்பு ரோஜா கூட்டு சேருது. அதனாலே இந்த
செவத்த அம்மாவுக்கு ஓட்டு கூடுது.
ஜெயத்துக்கு ஜெயம் சேருது.
கோட்டைக்கு நடையை கட்டு. இந்த
பரதேசிக்கு எதாச்சும் போட்டு. (சசிகலா 1000/ போடுகிறார்).

விஜயகாந்த் வீட்டு முன்பு :
குடு குடு குடு .நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது.
தனியாக கோட்டைக்கு போன ஐயா
கும்பலாக போற காலம் பொறக்குது.
சேர்ந்த எடத்தோட மகிமையால
கட்சி வளருது உங்க தெம்பு  கூடுது.
கிடுகிடு உயரத்துக்கு போவீங்க இந்த
குடுகுடுப்பையை கொஞ்சம் கவனீங்க. (நன்றாகவே கவனிக்கிறார்)

பொது ஜனத்தின் வீட்டு முன்பு
குடு குடு குடு .நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது
எலக்சன் வருகுது .எலக்சன் வருகுது.
ஒரு நாள் ராஜாவாகும் யோகம் அடிக்குது.லீவு
கிடைக்குது. வசதி பெருகுது.
5000/ வரை உனக்கு ரேட்டு ஏறுது. நேத்து வரை சீந்தாத உன்னை
பெரிய தலைகளெல்லாம் கும்பிடு போடுது.
ரொம்ப வேண்டாம் பழைய துணி போடு போதும்.

புதுவை  ராம்ஜி.
 

1 comment:

Pranavam Ravikumar said...

Lets see...! Wats gonna happen. :-)

Post a Comment