அவள் ஒரு தொடர்க்கதை


நடிகை சுஜாதாவுக்கு ஓர் அஞ்சலி.
எழுபதுகளின் ஒரு அழகிய கண்டுபிடிப்பு நம் சுஜாதா.
அதுவும் பாலசந்தர் அறிமுகம் வேறு. என்னை பொறுத்தவரை சுஜாதா,நதியா இவர்களுக்கெல்லாம் in built சோகம் கலந்த முகம் அமைந்துள்ளது என நினைப்பதுண்டு. அது அவர்கள் நடிப்பை பல
 மடங்கு தூக்கி காட்டும்.
முதல் படமான அ.ஒ.தொ.கதையிலேயே நம் மனதை தொட்ட நடிப்பு.அப்போது பிறந்த பல குழந்தைகள் சுஜாதா என்றே பெயர்
சூட்டப்பட்டன.பிறகு பல படங்கள். அன்னக்கிளியில் சோகத்திலும் ஒரு சுகம் இருக்கு வாத்தியார் அய்யா என்று சிவகுமாரிடம் சொல்லி விட்டு தன ஆசையை அடக்கிகொள்ளும் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்து விடுவார்.பிறகு விதி திரைப்படத்தில் வக்கீலாக  அசத்தினார்.பல நாட்கள் தொடர்ந்து ஒலி/ஒளி பரப்பான அந்த வசனங்கள் அப்போது பலருக்கு மனப்பாடம்.
தமிழ் திரை உலகம்  சுஜாதாவை என்றும் மறக்காது.
புதுவை ராம்ஜி


ஆமாம் விதி படத்தைப்பார்த்து விட்டு  வக்கீலுக்கு படித்த பெண்கள் அநேகம் பேர்கள்
கதாநாயகனுக்கு மகளாக நடித்து பின்பு ஜோடி சேர்ந்து பின்பு அம்மாவாக நடித்து ஒய்வு பெரும் தமிழ் கதாநாயகிகளில் சுஜாதாவும் விதி விலக்கில்லை. ஆனால் அவர் எப்போதும் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் நடித்து விட்டு மறைந்தார்.
 சுஜாதா நடித்து எனக்கு பிடித்த பாடல் இது.




 அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...ஆராரி...ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

No comments:

Post a Comment