பாருக்குள்ளே நல்ல நாடு


அன்றும் இன்றும்

  
அன்று

.இந்தியா 1000 வருடங்களாக எந்த நாட்டின் மீதும் படை எடுத்தது கிடையாது.

உலகின் முதல் பல்கலைகழகம் தாக்ஷில்லாவில்( பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் ) தொடங்கப்பட்ட ஆண்டு கி.மு.500.

.உலகின் மிகப்பெரிய பல்கலைகழகமான நாளந்தாவில் பயில உலகம் முழுதும் இருந்து வந்த  மாணவர்களின் எண்ணிக்கை 10500 .அவர்கள் பயின்ற கலைகள் 60 .கி.மு நான்காம் நூற்றாண்டின் கல்வித்துறையில் இது மிகப்பெரிய சாதனை. 

.ஃபோர்ஃப்ஸ் பத்திரிக்கையின்படி சமஸ்க்கிருதம் தான் கம்யூட்டர் மென்பொருளுக்கு மிகப்பொருத்தமான மொழி 

ஆயுர் வேத மருந்தே மனித இனத்தின் மிகத்தொன்மையான மருந்து..
படகு விடும் கலை சிந்துநதிக்கரையில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.ஆங்கில வார்த்தைன Navigation  நாவாய் என்ற இந்திய மொழியில் இருந்தே வந்தது.

பை” கணித குறியீடு புத்தாயானா கண்டுபிடித்தது. அவர் விவரித்ததேபித்தாகோர்ஸ்கண்டுப்பிடிப்பாக உணரப்பட்டது.இங்கிலாந்து அறிஞர்கள் 1999ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தனர். 

 Algebra, trigonometry and calculus இந்தியாவில் இருந்து வந்ததே.

 நவரத்தினங்கள் ஆராய்ச்சி செய்யும்  அமெரிக்க நிறுவனம் 1896 வரை உலகிலேயே வைரம் கிடைக்கும் ஒரே நாடாக இந்தியா இருந்து வந்தது என அறிவித்தது.
.
 தந்தியில்லா செய்தி தொடர்பினை கண்டுப்பிடித்தவர் ஜகதீஷ் போஸ் தான் மார்கோனி அல்ல என்று ஒரு நூற்றாண்டு சந்தேகத்தை IEEE தீர்த்து வைத்தது. 

செஸ் ஆட்டத்தினை கண்டுப்பிடித்தது நம்ம நாடுதான்
 சுஷ்ருதா தான் அறுவை சிகிச்சையின் தந்தை என  2600 ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டார்.அப்போது மயக்க மருந்து போன்ற வலி தெரியாத மருந்தும் உபயோகிக்கப்பட்டது


 இன்று

இந்திய அரசியல்வாதிகள் கடந்த 8 ஆண்டுகளில் ரூ6.5 லட்சம் கோடி மக்கள் பணத்தை ஊழல் செய்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர் என்று அமெரிக்காவில் உள்ள பொருளாதார புலனாய்வு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.  
 டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச ஊழல் மதிப்பீட்டு அமைப்பு  இவ்வாறு கூறுகிறது. 
ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 9-ம் தேதியை ஊழல் எதிர்ப்புத்தினமாக கடைப்பிடிக்கிறது. ;ந்த தினத்தை ஒட்டி மேற்கண்ட அமைப்பு ஊழலில் உலக நாடுகளின் தரவரிசையை ஆராய்ந்து ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. 
உலக அளவில் அரசியல் கட்சிகள்தான் அதிக அளவில் ஊழல் புரிகின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ள அந்த அமைப்பு, இந்த வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. 
மொத்தம் 62 நாடுகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 50,000 பேரிடம் திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஊழல் மிகுந்துள்ள நாடுகளை அந்த அமைப்பு வரிசைப்படுத்தியிருக்கிறது. இதில் ஈகுவேட்டர், அர்ஜெண்டினா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடாக இந்தியா இடம் பெற்றிருக்கிறது.
====================================================================================================================================
இன்றைய பாடல்
சிறுவன் கமலின் அழகான முகபாவம்,அருமையான பாடல் வரிகள் ,எளிமையான இசை.
யாருக்குத்தான் பிடிக்காது இந்த பாடல்


1 comment:

raki said...

wanted more ideas for solve human's(?)general problems

Post a Comment