அன்னையும் குருவும்


உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்




==================================================================================
இன்று மே 8  ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்களின் ஜெயந்தி.

ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம்
கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


சார்வாகர்கள், லோகாயதிகர்கள், காபாலிகர்கள், சக்தி வழிபாடு செய்யும் சாக்தர்கள், சாங்கியர்கள், பௌத்தர்கள், மாத்யமிகர்கள் என்று ஏறத்தாழ எழுபத்திரண்டு வெவ்வேறு மதவாதிகள் இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலமது

காலடியில் அப்போது ஒரு விடிவெள்ளி தோன்றிய.து சிவபெருமானே ஆதிசங்கராக இப்பூவுலகில் தோன்றினார் என்றும் கூறுவார்கள்

 ஆதி சங்கர் அப்பொழது  அவதரிக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? உலகில் முதலில் தோன்றியதாக கருதப்படும் ஹிந்து மதம் நசிந்துபோயிருக்கும்..

ஷண்மதம் என்ற மத கோட்ப்பாட்டினை அத்வைதம் என்ற பொக்கிஷத்தோடு தந்தார்.

உனக்கு பிள்ளையாரைப் பிடிக்குமா ? இந்தா உனக்கு  காணாபத்யம் கணபதியை முக்கிய கடவுளாக கும்பிடு
உனக்கு சிவனை ரொம்ப பிடிக்குமா சரி நீ சைவத்தை பின்பற்று

முருகனை இஷ்ட தெய்வமாக கருதுபவர்களுக்கு கொமாரம்

 சாக்தம்  சக்தியை வணங்குபவர்களுக்கு
 வைணவம் திருமால் அடியை தொழுபவர்களுக்கு
சரி எனக்கு உருவத்தில் ஈடுபாடு இல்லை இயற்கையே என் தெய்வம் என்பவருக்கு சரி சூரியனை வணங்கும்  சொரம் உனக்கு பொருத்தம்
இப்படி அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி மதத்தில் ஒரு புதுமையை புகுத்தினார்.

ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், ‘இவர் மட்டுமே உனக்குக் கடவுள் என்று எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தாமல், ‘இந்த அறுவரில் எவர் உன் மனதைக் கவர்கின்றாரோ, அவரையே முழு முதற் கடவுளாக நீ போற்றலாம் என்று வழி காட்டுகிற அத்வைத்தை நமக்காக உணர்த்தினார்.
அவர் பாடாத தெய்வங்கள் இல்லை.

எல்லா உபனிஷ்த்திலிருந்தும் சாரத்தை எடுத்து நமக்கு புரியும்படி சோபான பஞ்சகம் என்னும் நூலில் கூறியிருக்கிறார்.
* வேதம் எல்லாராலும் படிக்கப்பட வேண்டும். அந்த வேதங்களில் கூறப்பட்டிருக்கும் கர்மாக்களை அனுசரித்து நடக்க வேண்டும்
* ஆத்மாவைக் கண்டு கொள்ள ஆசைப்படவேண்டும்.

* சாதுக்களின் அருகில் இருத்தல் வேண்டும்.
* ‘நான் பிரும்மமாக இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் எப்பொழுதும் நினைக்க வேண்டும்.
 தியானத்தின் மூலம் அமைதி பெறவேண்டும்.
ஆதிசங்கரர் கூறியபடி ஆத்மாவை அறிய மிகச் சிறந்த மனஉறுதி அவசியம் இருத்தல் வேண்டும்.

 தன் சிஷ்யர்கள் மனதில் ஏறிய சிறு கர்வத்தை அடக்க எல்லோராலும் அசடு என்று அறியப்பட்ட கிரி என்ற மாணவன் நாவின் மூலம்  விதிதாகில என்று தொடங்கும் தோடாஷ்கத்தைப் பாடவைத்தார்.

. நிலையான பேரின்பத்தைப்  பக்திமூலம் பெற கருணாமூர்த்தியான சங்கர பகவத் பாதரின் பாதகமலங்களை இந்த தோடாஷ்ட்டகத்தின் மூலம் துதிப்போம்
 .

No comments:

Post a Comment