இந்த பாடலும் அவருடைய அற்புதமான படைப்புக்களின்
மத்தியில் மறக்கமுடியாத ஒன்று
|
தமிழர் அல்லாத ஒருவர் அற்புதமாக சிலப்பதிக்காரத்திற்கு இசை அமைத்தது பற்றி நாம் பெருமைக்கொள்ளலாம்.
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.
மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.
உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி.
இந்த ஹிந்தி பாடலை கேட்காதவர்கள் மிக குறைவு.இதுவும் அவர் இசைதான்.
இன்றும் கேட்க கேட்க சலிக்காத அவருடைய பாடல் இது
No comments:
Post a Comment