இந்தியாவில் முதல் முதலாக பூட்டு இல்லாத வங்கிக் கிளையை யூகோ வங்கி ஆரம்பித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சனி சிங்க்னா பூர் என்ற சிற்றூரில் சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆச்சரியம்
என்னவென்றால் அவ்வூரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே கிடையாது. அங்கு சனி பகவான் கோயில்
பிரசித்தம். தினசரி 5000 முதல் விசேஷ நாட்களில் ஒரு லட்சம் பேர் வரை வந்து போகும் ஊர்.
உள்ளூர் வி ஐ பி ஒருவர் பல வங்கிகளை அணுகி கடைசியில் யூகோ சம்மதித்தது. இது வரை அந்த
ஊரில் திருட்டே நடந்தில்லையாம். பார்ப்போம். சனியே துணை.
இன்று காலை ஆபீஸ் அவசரத்திலும் நான் மிகவும் ரசித்த பாடல். சங்கம் வளர்த்த தமிழ். தாய்
புலவர் காத்த தமிழ். காரணம் தெரியாமல் கண்ணீர் வந்தது. என்ன அழகான பாடல் வரிகள். இப்போது
அத்தகைய பாடல்கள் இல்லையே என்ற ஏக்கமா அல்லது நான் தற்போது வட மாநிலத்தில் நிறைய
தமிழ் பேசாத சூழ்நிலையில் வசிப்பதாலா . கண்ணீருக்கு காரணம் புரியவில்லை.
புதுவை ராம்ஜி .
|
ரிலாக்ஸ் ராம்ஜி .இப்பொழுதும் நல்ல பாடல்கள் எப்பொழுதாவது வருகின்றன .
காலங்கள் மாறும்போது ரசனைகளும் மாறுவது இயற்கை தானே .
இந்த பாடலை கேளுங்கள் இது இந்த காலத்து பாடல் தாம் தூம் படத்தில் வந்தது எவ்வளவு நல்ல இனிமையான பாடல்
|
No comments:
Post a Comment