புது வருட தரிசனம்

புது வருடம் முதல் நாள் நமக்கு கொண்டாட்டம் .ஆனால் நம் கடவுள்கள் நிலை தான் அன்று பரிதாபமானது.நான்  கேள்விப்பட்டவரை அன்று அவர்களுக்கு ஓய்வே கிடையாது .
24 மணிநேரமும் தரிசனம் தான் .பூஜா விதிகளின் படி நடக்கும் பல நித்ய பூஜைகள் ஓரம் கட்டப்பட்டு விடும் என நினைக்கிறேன்.
அன்று புதுவை மணக்குள விநாயகர் கோயில் தரிசனத்துக்காக மனித வரிசை பல மைல் தூரம் இருந்ததாகவும் பலர் தரிசனம் பார்க்க முடியாமல் வீடு திரும்பியதாகவும் கேள்விப்பட்டேன்
இந்த நிலை தென் இந்தியாவில் தான் அதிகம் .
அமெரிக்காவிலும் நம்மூர் மக்கள் இதை சிரத்தையாக கடை பிடித்து பல மைல் தூரம் பயணம் செய்து ஜன்ம சாபல்யம் அடைகிறார்கள் .
இது மக்களின் உளநிலை சார்பு உடையதாக இருக்கின்றது .
புது வருட கடவுள் தரிசனம் அவர்களுக்கு ஒரு  நேர் மறை எண்ணங்களை கொடுப்பதை மறுக்கவில்லை ஆனால் இதே அளவு அது கிடைக்காவிட்டால் எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் .
அன்று ஜனவரி முதல் நாள் புதுவருட ஆரம்பம் தரிசனம் நன்றாக கிடைக்கவில்லை .சகுனம் சரியில்லை அர்ச்சனை  தேங்காய் சரியாக இல்லை என்ற காரணங்களால் பலபேர் மன உளச்சலால் அவதிக்குள்ளகிறார்கள்.
முதலில் சொல்லப்போனால் ஜனவரி முதல் தேதி சமீப காலமாகத்தான் (சுமார் 600 வருடங்களாக) புதுவருடமாக கருதப்பட்டு வந்திருக்கின்றது .ஜூலிஸ் சிசர் முதலில் ஜூலியன் காலண்டர் கொண்டு வந்தார் பின்பு ஜானுஸ் என்கிற கிரேக கடவுள் பெயரில்
ஜனவரி மாதத்தை தோற்றுவித்தார் பின்பு கி பி 1582 தான் போப் இதை அங்கீகாரம் அளித்தார்
அப்படி இருக்கும் போது நாம் ஏன் இதற்கு இவ்வளவு முக்கியம் கொடுக்க வேண்டும்  ஆ ன்மீக விஷயத்தில் .சுவாமி தரிசனம் முக்கியம் சில பண்டிகை நாட்களில்
 .நம் முன்னோர்கள் சூர்ய சந்திர பயணங்களை கணக்கிட்டு தைவீக யீர்ப்பு சக்தியினை கொண்ட நாட்களாக சில நாட்களை  அவதானித்து உள்ளார்கள். அந்த நாட்களில் முடிந்தால் கோயிலுக்கு செல்லலாம் அல்லாவிடில் முதல் நாள் அல்லது மறுநாள் சென்று மனமார வேண்டிக்கொண்டு வரலாம்
இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பின்பு சீனா உலக தாதா வாகி சீன புத்தாண்டை புது வருட மாக எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டால் அன்று நம் ஊர் பெருமாள் கோயிலில் 24 மணிநேர தரிசனத்துக்காக கூட்டம் நெரியும்

No comments:

Post a Comment