நமக்கு என்ன வேண்டும்

எனக்கு மட்டும் அன்றி  எல்லோருக்கும் வேண்டும்  பாடல்கள்




                


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் 
கபடு வாராத நட்பும் 
கன்றாத வளமையுங் குன்றாத ­ளமையும் 
கழுபிணியிலாத உடலும் 
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும் 
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும் 
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு 
துன்பமில்லாத வாழ்வும் 
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! 
ஆதிகட வூரின் வாழ்வே! 
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! 
ஆதிகட வூரின் வாழ்வே! 
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! 
அருள்வாமி! அபிராமியே! 
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! 
அருள்வாமி! அபிராமியே! 

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே







திருஅருட்பா
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
      உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
    பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
    பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
   மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
   வாழ்வில்நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
   தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
   சண்முகத் 
தெய்வமணியே 

நமக்கு என்ன வேண்டும்





"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்ஓம் ஓம் ஓம்





 அட நம்ம பசங்களுக்கு இதுதான் வேண்டுமாம்








தீராத தம்மு வேண்டும்
திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேண்டும்

கவிதையின்னா சொல்லு வேணும்
காதலுன்னா தில்ல்லு வேணும்
கேரம் போர்டு காயின் போல
கண்ணு ரெண்டும் ஓட வேணும்

காதல் செஞ்சு ஜெயிச்சா நீயும்
கனவாக மாற வேணும்
காதல் செஞ்சு தோற்றா நீயும்
அடுத்த பொண்ண தேட வேணும்

காலேஜு போனா தலைய சீவ
கண்ணாடி வச்ச சுடிதார் வேணும்
லேடிஸ் ஹாஸ்டல் உள்ளே போக
சுரங்கம் தான் வேணும்

ஏய் அழகு பொண்ணு பஞ்சமின்னா
ஐஸ்வர்யா ராய் க்ளோனிங் வேணும்
தங்கமான பொண்ணு இன்னா
உரசி பார்க்கணும்

பில்கேட்ஸு எங்களைத்தான்
தத்தெடுத்து போக வேணும்
திருப்பதி உண்டியலில்
தினம் ஒரு பங்கு வேணும்

சீரபுஞ்சி மழைய போல
பீர் மழை பெய்ய வேணும்
சிறையில் உள்ளே காவிரி ஆறு
வெயிலுதானே வெளியே வேணும்
(
தீராத..)

ஸ்டாரு ஹாட்டல் போதும் போதும்
பழச நீயும் நெனைக்க வேணும்
கையேந்தி பவனுக்கெல்லாம்
நன்றி சொல்லணும்

கேட்ட உடனே வேலை கொடுக்கும்
புதிய கடவுள் பொறக்க வேணும்
ரப்பர் வச்சு வறுமை கோட்டை
அழிக்க தான் வேனும் ஹே

சீக்கிரமா போகணுமா
ஒன் வேயில் போக வேனும்
தேனிலவு போகனும்னா
டபுள்ஸாக போக வேணும்

ஜன்னல் வச்ச ஜாக்கேட் எல்லாம்
கதவு வச்சு மூட வேணும்
கன்னி தமிழு மட்டும் தானே
கல்லூரி பெண்கள் பேச வேண்டும்
(
தீராத..)

No comments:

Post a Comment