புத்தக கண்காட்சியும் நானும்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்  .

 சென்னைக்கு வந்து இறங்கியவுடனே காரில் அம்மா முறைத்து கொண்டு வந்தாள்.
போன மாதம் மாமாவுக்கு 60 ம் கல்யாணம் அப்போ வர தெரியலை .புத்தக கண்காட்சிக்கு மட்டும் வரத்தெரியுது ஜன்னலை பார்த்துக்கொண்டு முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள்.நானும் கவனிக்காத மாதிரி டிசம்பெர்லே கூட இந்த வெயில் அடிகிறேதே என்று பீலா விட்டுகொண்டிருந்தேன்
அன்றே புத்தக கண்காட்சிக்கு வந்து விட்டேன்  .
எதிர் பார்த்ததை விட கொஞ்சம் கூட்டம் அதிகம்தான் .
முதலில் உயிர்மை ஸ்டால் க்கு சென்றேன் .சாரு மனுஷ்ய புத்திரனுடன் பேசிக்கொண்டிருந்தார் .அதே டிசைன் போட்ட ஷர்ட் அணிந்திருந்தார் .என்னை பார்த்ததும் அடையாளம் கண்டு நலம் விசாரித்தார் .மனுஷ்ய புத்திரன் என்னை கண்டுக்கலை .சாரு வின் தேகம் புத்தகத்தை வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கினேன் .திரும்பும்போது எஸ் ரா உள்ளே நுழைந்தார் .
கிழக்கு ஸ்டாலில் கேபிள் சங்கரை பார்த்துவிட்டு ஹலோ சொல்லும்போது அட நம்ப ஜெ.மோ  கொஞ்சம் களைப்பாக தென்பட்டார் .
மறுநாள் பார்த்த பிரபலங்கள் வைரமுத்து ஒ அருண் .
நான் வாங்கின புத்தகங்கள் .
இத்தாலி எழுத்தாளர் கசாகசா வின் பதியக்கர்ன்
மு .ப வின் பொங்கல் .Vi.tee ra இன் tantanga
பிரெஞ்சு எழுத்தாளர் ழந்தார் ப்ருழ்ன்  எழுதிய மிசியே முதலியன .

உஸ் அப்பாடி இப்பவே கண்ணை கட்டுதே .
இப்படி எல்லாம் எழுதணும் என்று எனக்கும் ஆசைதான்.என்னசெய்வது
போனமாதம் தான் விடுமுறையை கப்பலில் கழித்து விட்டு பேங்க் பாலன்சையும் விடுமுறையையும் இந்தியா உலகத்துக்கு கண்டுபிடித்து கொடுத்த இலக்க நம்பர்க்கு கொண்டுவந்து விட்டேன் .எங்கே சென்னை க்கு வந்து புத்தகம் வாங்கி இலக்கிய சேவை செய்வது
 புத்தக கண்காட்சியைப்பற்றி எழுதாவிட்டால் என்னை பதிவர் என்றே பதிவுலகம் என்னை ஒத்துகொள்ளாது .அதான் இந்த அலப்பறை .
சத்தியமாக மேலே குறிப்பிட்டவர்களுக்கு என்னை தெரியாது  என் பெயரை கொண்டவர்கள் அவர்களுக்கு  நண்பர்களாக இருப்பார்கள் என்பதே சந்தேகம் .
கசகசா,பைத்தியக்காரன் ,முந்தரிபருப்பு பொங்கல் விஜய் டி ர  டண்டணக என்பதெல்லாம் போட்டு ஒரு இன்டர்நேஷனல் வாசத்தை என் பதிவில் கொண்டு வந்து விட்டேன்
அடுத்த புத்தக கண்காட்சியில் மீண்டும் சந்திப்போம்

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

ok

R.S.KRISHNAMURTHY said...

வலைப்பூ உலகிற்கு வெல்கம். கடவுள் வாழ்த்துக்களோடு ஆரம்பித்திருப்பது தான் ஏதோ பள்ளி விழாவில் இருப்பது போல ஒரு பீலிங்கி. சரளமாக எழுத வருகிறது உங்களுக்கு. நிறைய எழுதி நிறைய சாதித்து, நிறைவோடு வாழ என் ப்ரார்த்தனைகள்!

Post a Comment