இதெல்லாம் தமிழிலிருந்து வந்ததுங்கோ

காசு லேருந்து cash  பெற்றோம்
 கட்டுமரம் catamaranஆனது
சுருட்டு cheroot தான் 
coir  கயிறுலேயிருந்துதான் வந்தது -- 
மிளகுத்தண்ணி ஐ  mulligatawany soup ஆக குடித்தோம் 
 இலுப்பை illupai யாக உருமாறியது
பாளை palay யானது 
tutenag  வேறு  என்ன நம்ம துத்தநாகம் தான் l
யாராவது ரொம்ப ஸ்டைல் ஆக எங்க வீட்டு வாசல்படி எல்லாம் teak ல் செய்தது என்றால் ஓ நம்ப தேக்கு என்று அவங்களை வெறுப்பேத்துங்க 
நம்ப கிடங்கு (godown) அரிசிலேயிருந்து அவங்க rice சாப்பிடுகிறார்கள் 
 மாங்கா mango வாக அவங்க பழத்தட்டில் இருக்கிறது
சரி அதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்றீங்களா .
அட நீங்க வேற நானே ஒரு பதிவை எப்படியாவது நிரப்பிட வேண்டும் என்று
எழுதுகிறேன்

சிரிப்பாய் சிரிங்க

தந்தை வெளிஊரில் இருக்கும் மகனுக்கு அவசரமாக போன் செய்து
எனக்கும் உங்க அம்மாவுக்கும் ஒத்துவரலை .இருபத்தைந்து வருட வாழ்கையில் நான் நிறைய அவமானப்பட்டுவிடேன் .இனிமேல் தாங்க முடியாது .விவாகரத்து ஒன்றுதான் வழி பக்கத்துக்கு ஊரில் இருக்கும் .உன் தங்கையிடமும் சொல்லிவிடு  என்றார் .
மகன் கவலையுடன் அப்பா அவசரப்பட்டு எதையும் செய்து விடாதீர்கள் ,நாங்கள் வருகிறோம் பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்றான்.
தந்தை மனைவியை பார்த்து அப்பாடா பசங்கள் ஒரு வழியாக நம்மை அவர்கள்செலவிலே பார்க்க வருகிறார்கள் என புன்னகை செய்தார் .

ஒரு அமெரிக்கர் ஒரு ஆப்பிரிக்கர் ஒரு ரஷ்யர் வான்வெளியில் பாரசூட்டில் பறந்து கொண்டிருந்தனர் .ரஷ்யர் கையை வானவெளியில் விட்டு நான் இப்பொழுது ரஷ்யா மேல் பறந்து கொண்டிருக்கின்றோம் என்றார் .மற்றவர் எப்படி தெரியும் என்பதற்கு குளிர் காற்று என் கையில் அடித்தது என்றார்..கொஞ்சம் தூரம் சென்றவுடன் ஆப்பிரிகர் கையை  கீழே துளாவி வெப்பக்காற்று அடிக்கிறது ஆகையால் நாம் இப்போது ஆப்பிரிக்கா மேலே பறக்கிறோம் என்றார், மேலும் சிறிது தூரம் சென்றவுடன் அமெரிக்கர் கையை கீழே
துழவி ஹய்யா நாம் நியூயார்க் மேலே இருக்கோம் என்றார் .எப்படி என்று மற்றவர்கள் வியப்புடன் கேட்டபோது என் கையில் கட்டியிருந்த கைகடிகாரம் இப்போது காணோம் என்று கூவினார்


.
நாளை பனி பொழியும் என இங்கு  வானிலை சொல்லுகிறது .அதனால் நாளை எங்கும்வெளியில் போகமுடியாது எனவே மேலும் உளறல்களை எதிர்பார்க்கலாம்

2 comments:

சமுத்ரா said...

:)

இக்பால் செல்வன் said...

poppudum - பப்படம்
chutney - சட்னி
kid - கிடாய்
vettiver - வெட்டிவேர்
naval - நாவாய்
இன்னும் நிறைய இருக்கு இதையெல்லாம் தேவனேய பாவாணர் ஒரு நூலாய் வெளியிட்டதாக ஞாபகம்னுங்க.............

Post a Comment